VIZI MOZI

உன் விழியெல்லாம் நவரசம் || கவிதைகள் || தொட்டராயசுவாமி.அ

Monday, December 17, 2007

27.தவிப்பு

உன் கண்களை
என் கண்கள்
கண்டதில்லை

என் சூவாசம்
உன் சூவாசத்தை
சூவாசித்ததில்லை

நம் கைகள்
நான்கும் பரிசித்ததில்லை

நாம்
தனிமையில் கூடி
பொழுதைக்கழிக்கவில்லை

முகங்களை
மறந்து மனசுகள்
மட்டும் மாட்டிக்கொண்டன

ஏதோ ஒரு
தவிப்பினில்

எதையோ அடைகின்றோம்
என்று இருவருமே
தந்துகொள்கிறோம்
அன்பை.

Labels: ,

Saturday, December 15, 2007

26. நீ நிலா நான்

நீயில்லா
வாழ்க்கை என்பது
எனக்கு

நிலவில்லா
வானம்போல

இருந்தும்

வானில்
உன் ஞாபக நட்சத்திரங்கள்
மின்னிபடி என்னை
வாழவைத்துவிடுகின்றது.

Labels: ,

Tuesday, December 11, 2007

25. வேண்டுதல்

உனை
எங்கு பார்த்தேன்
என்று ஞயாபகமில்லை

தேடிப்பார்த்ததில்
மொத்தமாய்
உயிரை ஆக்கிரமித்து

என்னுள் - நீ !

Labels: ,

24.கொஞ்சும் கவிதை

இவைவெறும்
வார்த்தைகள்
அல்ல-

என்னுள்
நீ
நடத்திய
வேள்விகளில்
எரிந்துபோக
மறுத்து!

நான் மலர்ந்த
தருனங்கள்?

Labels: ,

23. திரவியம் தேடு

சேர்த்துவைத்த
முத்தங்கள்
சிதறிபோயின
சில்லரைக்காக..

நான் இங்கே..

என் நாட்டில்
நீ அங்கே..

நமக்கான
நாமெங்கே?

Labels: ,

22.நிலா

என்னவள் சூட
மலர்ந்தது நிலா..

அவள் கன்னத்து
மிளிர்தலைக் கண்டு
நாணி- நாளை
மலர்வதாய் சொல்லி
மறைந்த்து..

இதைவிட சிறப்பாய்..

Labels: , ,

Monday, December 10, 2007

21. இவைகளுக்காக

நம்முள்
தொலைந்துபோன
உணர்வுகளை
திரைசீலையிட்டு
உன்னுள்தேடுகிறாய்..

ஒற்றை தடத்தில்
ஓடிஒளிந்த
உணர்வோடையை
என்னுள்தேடுகிறேன்..

முதலில் யாருக்கு
கிடைத்தாலும்
அவர்களின் உதடு

கண்களின்
உப்புகரைசலை
சுவைத்துவிடும்...

இருந்தும்..

உனக்குள் காதலனும்
எனக்குள் காதலியும்
இவைகளுக்காய்
வாழ்ந்துகொண்டுதான்
சாகிறார்கள்..

Labels:

20. புன்னகை


நாம் நின்று
பேசிய இடதில்
தேன் குடிக்க
வண்டுகள் வட்டமிட்டன
நீ சிந்திய
புன்னகை பூக்களில்..

Labels: ,

19.வ(ர)ராதச்சனை


முத்தசுவையில்
இரத்தவெறி-
தூக்கில்
தொங்கினாள்
புதுபெண்..

Labels: ,

18. உடைத்துவிடாதே


என்
கனவு குமிழ்களை
கலையாமல்
அனுப்பிவைகிறேன்..
ரசித்துப்பார்
மறந்தும் கூட
உடைத்துவிடாதே..
உன் உயிர்
அதிலுள்ளது..

Labels: , , ,

17. சுவடு

கால்கள்
நான்கிருந்தும்

பயணம்
ஒன்றானதால்

சுவடு
இரண்டானது..

காதலில்!

Labels: , ,

16. நாம் அமரும் நாற்காலி


உயர்தினை
காதல் தோல்வியில்
உடைந்துபோனதோ?
அஃறினை!

Labels: ,

15. காதலின் பின்விளைவு

இலையுதிர்
காலம் வரை
காத்திருக்கவில்லை
கிழைகள்
இலைகளை
உதிர்த்துவிட்டன
நாம் அமர்வதை
நிறுத்திக்கொண்டதில்..

Labels: , ,

14.பனி

என்மேல் விழும்
சூரியக்கதிர்களும்
பாரமனது!

பாராமல்? போகும்- பனி
உன்னால்....

Labels: ,

13.நீயா? நானா?


குளக்கறையில்
நாம்
மீன்களுக்குள்
சண்டை
முதலில்
முத்தமிடுவது
நீயா? நானா?

Labels: ,

12.ஜன்னல்


எனக்கு போட்டியாய்
ஒற்றை மலர்
ஜன்னல்
எட்டி பார்கிறது
காதலால்!

Labels: , ,

11.காதல்



நீ
நான்
சுற்றி எல்லாம்?

நாம் மட்டும்
தனியே !

Labels: ,

10. குமிழ்கள்


உன்
நினைவு குமிழ்களை
கனவில் உதிர்த்துவிடுகிறாய்
தினமும் பூக்கொத்தோடு
நான்..

Labels: ,

9.வன்முறை


நான் வரைந்த
வண்ணங்களுக்குள்
வன்முறை..
அருகில் நீ!

Labels: , ,

8. வரம்


வராது
என்றேன் நான்!
வந்துவிடும்
என்றான் ஒருவன்!

வந்தாலும்
நிற்காது
என்றான் இன்னோருவன்!

வந்தாலும்
முடியாது
என்றனர் எல்லோறும்!

இறைவா!
வரம் கொடு
இந்த பேருந்தும்
இலங்கை
போரும்
நிற்பதற்கு..

Labels: ,

7. பசி



அவனுக்கு உடம்பில்
அவளுக்கு வயிற்றில்
பரிமாறிக்கொண்டார்கள்

Labels: ,

6. சிவப்பு செதில்கள்


கசிந்துரிகியது
காதல்-இதயத்தில்
உதிரமாய்..

மடிந்து ஒடிந்தது
மனம்-மரணத்தில்
காதலாய்..

உனக்கும்
எனக்குமான
தூரம் - துள்ளியமாய்
துலங்கியது
தொலைவினில்..

தொட்டுக்கொண்டது
வானம்
பட்டுச்சென்றது
மேகம்

என்னை சுற்றி
மின்னல் - உன்
கண்கள் சுற்றி
மழை

நம்மை சுற்றி
வெளி..

Labels: ,

5. தாய்மடி வாசம்

தாய்மடி வாசம்
தரனியில் தேடி
தவழ்ந்துகொண்டிருப்பவன்
நான்...

எப்போதவது
கிடைக்கக்கூடும்....

அதுவரை
பொரு மனமே..

தாய்மடி வாசம்
தருபவள்
மனைவியாககூட
இருக்கக்கூடும்....

எனெனில்
வேண்டி பெருவதே
வாழ்க்கை என்பதால்...

Labels: ,

4. எதுவோ அதுவே

எதை
எடுத்தாயோ
அது
என்னுள்லிருந்தே
எடுக்கப்பட்டது...

எதை
மறுக்கிறாயோ
அது
என்னுள்ளேயே
புதைக்கப்படுகிறது

எதுவோ
அதுவே காதலாகி
கசிந்து என்னுள்
கனிகிறது...

Labels: ,

3. மழைக்காலம்

தொலைவில்
இருந்து - நீ,
எனை ரசிப்பதை..

அருகினில் காட்டிக்
கொடுத்தது ஒற்றை
மழைதுளி..

Labels: ,

Friday, December 7, 2007

2. தனியாய்..

அழகாய்
இருக்கின்றது
என்பதற்காக
பறித்த பூவை
என்னச்செய்வது
என்று அறியாமல்

ஓசித்த நாட்களில்
தனியாய்
அழுததுண்டு
தனிமையில்..

Labels:

1. இசையானவள்

சுரங்களுக்கே
சுகமளிக்கும்
சூச்சமக்காரிக்கு

சுபமங்களம்
மட்டும்
வாசிக்கத்தெரியவில்லை
காதலுக்கு..

Labels: