Monday, December 17, 2007
Saturday, December 15, 2007
Tuesday, December 11, 2007
Monday, December 10, 2007
21. இவைகளுக்காக

தொலைந்துபோன
உணர்வுகளை
திரைசீலையிட்டு
உன்னுள்தேடுகிறாய்..
ஒற்றை தடத்தில்
ஓடிஒளிந்த
உணர்வோடையை
என்னுள்தேடுகிறேன்..
முதலில் யாருக்கு
கிடைத்தாலும்
அவர்களின் உதடு
கண்களின்
உப்புகரைசலை
சுவைத்துவிடும்...
இருந்தும்..
உனக்குள் காதலனும்
எனக்குள் காதலியும்
இவைகளுக்காய்
வாழ்ந்துகொண்டுதான்
சாகிறார்கள்..
Labels: kavithai
15. காதலின் பின்விளைவு

இலையுதிர்
காலம் வரை
காத்திருக்கவில்லை
கிழைகள்
இலைகளை
உதிர்த்துவிட்டன
நாம் அமர்வதை
நிறுத்திக்கொண்டதில்..
Labels: kavithai, இலையுதிர் காலம், காதல்
Friday, December 7, 2007
2. தனியாய்..
அழகாய்
இருக்கின்றது
என்பதற்காக
பறித்த பூவை
என்னச்செய்வது
என்று அறியாமல்
ஓசித்த நாட்களில்
தனியாய்
அழுததுண்டு
தனிமையில்..
இருக்கின்றது
என்பதற்காக
பறித்த பூவை
என்னச்செய்வது
என்று அறியாமல்
ஓசித்த நாட்களில்
தனியாய்
அழுததுண்டு
தனிமையில்..
Labels: kavithai
1. இசையானவள்
சுரங்களுக்கே
சுகமளிக்கும்
சூச்சமக்காரிக்கு
சுபமங்களம்
மட்டும்
வாசிக்கத்தெரியவில்லை
காதலுக்கு..
சுகமளிக்கும்
சூச்சமக்காரிக்கு
சுபமங்களம்
மட்டும்
வாசிக்கத்தெரியவில்லை
காதலுக்கு..
Labels: kavithai