VIZI MOZI

உன் விழியெல்லாம் நவரசம் || கவிதைகள் || தொட்டராயசுவாமி.அ

Wednesday, January 30, 2008

இலவசமாக படிக்கலாம் வாங்க!



இலவசமாக படிக்க (கவிதைகள்) மேலே உள்ள படத்தை click செய்யவும் (or)


sample:
ஆசை மிகுதியில்
உன் கனனம் தொடும்
மழைத்துளியை
அவசரப்பட்டு
உதறிவிடாதே
என் கவிதை
கருவறையில்
அவைகள் தான்
உன் சாயல்
குழந்தைகள்...

Labels:

Monday, January 28, 2008

காதலிகள்.com (7)


//அனைத்துக் கவிதைகளையும் படிக்க விழிமொழி //
----------------------------------------------
என் எட்டு திசைகளிலும்
நீயே நிரம்பிக்கிடக்கின்றாய்
என அறிந்து

நான் பாதசாரியாக
பயணித்த
என் தேடலில்

நீ எந்த திசையில்
உயிர்வாழ்கின்றாய்
என அறியாது

திசையினையே
நீயெனக் கொண்டு
சூவாசிக்கின்றது
என் நுறையீரல்

*சொல்வதை கேளாமல்
சட்டென
சிரித்துவிடுகின்றாய்
நீ

அப்பொழுதெல்லாம்
ஆசையில் வீழ்கின்றது
கன்னக்குழியுள்
என் மனசு.

*என் செய்வது

நீ அன்னிச்சையாக
சுவாசித்து விடுகின்றாய்
காற்றை
பெயர்பெற்றது
தென்றலென்று.
*

Labels:

Sunday, January 27, 2008

காதலிகள்.com (6)


// அனைத்துக் கவிதைகளையும் படிக்க விழிமொழி //
*
வார்த்தைகளுக்குள்
அடங்காத என் வாசகியே
நீ வாசிக்கதவம்
கிடக்கின்றது
என் கவிகள்
*
உன் நிலம்
மழைப்பொழிய
காத்துக்கிடக்கின்றது
என் வானம்
முரண்களுக்கு
முடிவில்லை
காதலில் மட்டும்
*
நில்
கவனி
காதலில்
காதலி
*

Labels:

Wednesday, January 23, 2008

காதலிகள்.com(5)



// அனைத்துக் கவிதைகளையும் படிக்க விழிமொழி //

ஆசை மிகுதியில்
உன் கனனம் தொடும்
மழைத்துளியை
அவசரப்பட்டு
உதறிவிடாதே

என் கவிதை
கருவறையில்
அவைகள் தான்
உன் சாயல்
குழந்தைகள்...

*உன்னால் காயம்பட்டு
உடைந்துபோனது
என் இதயம் - பின்

சிதரிய எண்ணிக்கையில்லா
அவைகள், மீண்டும்
முந்தைய அளவைவிட
உன்னை விரும்பச் செய்து

வலியினிலும் இன்பமடைந்து
உடைதலுக்கு தயாராகின்றன
மீண்டும்.

*என் ஒவ்வொரு
அனுவினிலும் நீ

உடைக்க நினைக்காதே

அவை இரண்டெனப்பிளந்துதரும்
காதல் வெப்பத்தை
தாங்கமாட்டாய்

மெல்லியவளே!
*

Labels:

Tuesday, January 22, 2008

காதலிகள்.com(4)

// அனைத்துக் கவிதைகளையும் படிக்க விழிமொழி //
*உன் பிரிவினில்

கண்களில்
கரையும் உப்புக்கரைசலை
உள்வாங்கிக்கொண்டு

பிரிதலில் உனக்கொன்றும்
சலனமில்லை
என்பதுபோல் பிரிந்துவிடுவாய்

இருந்தும் ஏன்?
விழிகொண்டு
பேசமறுக்கின்றாய்
நம் சந்திப்புகளில்

*நீ
என் மனப்பூ
சேமித்த உணர்வுத்துளியடி..

பொறுத்திருந்துபார்
காதல் முத்தொன்றை
பரிசளிப்பேன்
பூவின் இதழ்களைவிரித்து…

* நம் நடைப்பயணஙகளில்
நமக்கு துணையாக
பூமரங்கள் சிந்திடுமே
அந்த சிவப்பு பூக்களை

நினைவிருக்கின்றதா?

அவைகளே உனக்கான
சந்தங்களை எனக்கு
தந்து, கவிஞனக்கின
என்னை இன்று!

Labels:

Thursday, January 17, 2008

காதலிகள்.com(3)

// அனைத்துக் கவிதைகளையும் படிக்க விழிமொழி //

*என் ஆனேக கிறுக்கல்களை
நீ படித்ததாலேயே அவைகள்
இன்று கவிதைகளாகிவிட்டன
*
நான் மொழிப்பெயர்க்க
ஆசைப்படும் அனைத்து
தருணங்களும்

உன் தனிமையே..

*விடிந்த பின்னும்
தொடரும், நாம்
தொடங்கிய
நேற்றைய பேச்சு

தொலைபேசி இன்னும்
செவியோரம் சினுங்கிக்கொண்டிருக்கின்றது
அனைக்க மனமில்லாமல்
*
உயிரை அழுத்தி
நீ முத்தம் இட்டாலும்
காமமற்ற காதலில்
கவிதையெழுதவே
தோன்றுகின்றது..

நம் கூடலில்

*
வெளிர்ததெல்லாம்
தேவதைகள் என்றென்னியிருந்தேன்

உன்னைகாணும் வரை
சாம்பல்நிறத்து
தேவதையே!
*
நீ ரசிக்கும் பட்டாம்பூச்சி
இன்றும் என் விரல்களில்
முத்தங்கள் பதிக்கின்றன

உனக்கா காத்திருந்த
இந்த தருணத்தில்
*

Labels:

Saturday, January 12, 2008

காதலிகள்.com(2)



// அனைத்துக் கவிதைகளையும் படிக்க விழிமொழி //
*
உன்னை என் கவிகள்
வெட்கப்படுத்தும் போதெல்லாம்
நான் நீயாகிவிடக்கூடாதா
என்றெண்ணி நானும்வெட்கமடைகின்றேன்

*
நீ கவிதைகள் எழுதவேண்டும்
நீயாக இருந்து
நான் வாசிக்கவேண்டும்

என் கவிகளை
நீ படித்துணர்ந்ததைபோல…

*
உன்னைக் கண்டமுதலே
வானமும் அதன் நீலமும்
தனித்தனியே
உணர்ந்து கொண்டேன்

*
உன்னை கண்டமுதல்
இதுநாள் வரை
நீ எங்கு,எப்படி இருந்தாய்
என்பதிலேயே
தாகம் கொண்டது மனசு

*
என் கால்களிடம்
கேட்டுப்பார்
உனக்காக காத்திருந்த
தருணங்களில்
என் கால்களின்
வலியை எப்படிகரைத்தேன்என்று
அழகிய கவியாகசொல்லும்..

உன்னை காதலிக்க ஆரம்பித்தபிறகு
அவைகளும் கவி எழுதுகின்றன

*
என் ஆனேக கிறுக்கல்களை
நீ படித்ததாலேயே அவைகள்
இன்று கவிதைகளாகிவிட்டன

*
நான் மொழிப்பெயர்க்க
ஆசைப்படும் அனைத்து
தருணங்களும்

உன் தனிமையே..

*
விடிந்த பின்னும்
தொடரும், நாம்
தொடங்கிய நேற்றைய பேச்சு
தொலைபேசி இன்னும்
செவியோரம் சினுங்கிக்கொண்டிருக்கின்றது
அனைக்க மனமில்லாமல்
*

Labels:

Friday, January 11, 2008

காதலிகள்.com(1)

//அனைத்துக் கவிதைகளையும் படிக்க விழிமொழி //

*
இன்றும் என்னெதிரே
தேனீர் குடுவை
உனக்காக வாங்கிவைத்திருக்கின்றேன்

நீ பருக அருகிலில்லை
என்றாலும்

உனக்கானவைகளை
நான் என் செய்ய?
*
நான் உன்னிடம்
இதுவரை சொல்லாத
தவிப்பை விட

நீ யாரிடமும்
சொல்லிவிடக்கூடாது
என்ற பயமே
என்னை கவலையடையச்செய்கின்றது

"நான் உன்னை காதலிக்கின்றேன்".

*
நீரின் மேல்
இலைவிழுந்து போல்

இன்னும்
அடங்கவில்லை என்னுள்
உன் ஞாபக அதிர்வுகள்..

*
புத்தகக் கண்காட்சியில்
உன்னை என் கண்கள் படிப்பதை
நீ பார்த்துவிட்டதில்

என் கண்களை
கையில் கிடைத்த புத்தகத்தில்
பதித்தேன்..

தலைப்பு காதல்.
*

Labels:

Thursday, January 10, 2008

காதலிகள்.com


//அனைத்துக் கவிதைகளையும் படிக்க விழிமொழி //

*நான் படித்ததில்
மிகவும் பிடித்தது

உன் இதழ்களின்வரிகளே!

சில்மிஷியே
அருகினில் வா!

*உன்வீட்டு வாசலில்
அறிவிக்க செய்

"தேவதை ஜாக்கிரதை"

*
நீ நிலவொளியினில்தான்
நடந்து வருகின்றாய்
பதறுகின்றது
என் மனசு

ஓளியின் வீச்சில்
காயம்பட்டுவிடக்கூடாதே
உன் மேனி என்று..
*
நீ ‘ம்’ கூட சொல்லவேண்டாம்
கடைக்கண்ணால்
மட்டும் பார்
உனக்கும் சேர்ந்து
நானே காதலிக்கிறேன்!

*
என்னை முதன்
முதலாக பார்த்தபோது
என் தாய் வடித்த
ஆனந்தக் கண்ணீரே
எனக்கும் வழிந்தது

உனை முதன்முதலாக
பார்த்தபோது…

*
"க்ஞங்ங்ங் ந்ணஜ
ஒப்ப்ம்ட்ம்ம்ம் ந்ன்ன்ன்"
புரிகின்றதா?

இப்படித்தான்
நீயில்லாத நேரங்களில்
நான்

*
உனை அழகி என்று மட்டும்
வர்ணிக்கும் தோழி மீது
கோபமாய் வருகின்றது
தேவதையே..
*
நீதாமதமாகவே
வருவாய் என்றாலும்
நீ வரும் வரை

துணையாக இருந்த
உன் நினைவுகளை
களையும் போதுதான்
கோபமே வருகின்றது
உன் மீது!

*
சமிபத்தில்
நீயும் நானும்
லாபமடைந்த விஷயம்
முத்தம்.
*
நீ என்னுடன்
சண்டையிடுவதே
முத்தம் கொடுக்கத்தான்
என்று எனக்குதெரியும்
அது உனக்கும்தெரியும்
பின் எதுக்கு
சண்டை?
*
நீ
எங்காவது
எதையாவது
விட்டுவிட்டு போ
பத்திரப்படுத்தவேண்டும்
என்னுள் இருக்கும்
உன் நினைவுகளுக்காக..
*
நான் எழுதும்
கவிதைகள் யாவும்
உனக்காகத்தான் என்று
சொல்வது
பொய் என்றாலும்
உண்மையும் உண்டு.
*
எனக்கு தனிமை
மிகவும் பிடித்திருந்தது
அது உன்னுடன்
மட்டும் எனும்போது..
*
நான் எழுதி அனுபிய
கவிகள் யாவும் திருடப்பட்டவையே
உன்னிடமிருந்து
மட்டும்

*
உன் கண்கள் என்ன
பன்பலைவரிசையா?

எப்போதும்
ஏதோ ஒன்றினை
என் மன வானொலி
இதயத்தில்
ஓயாமல் ஒளிபரப்பிக்கொண்டிருக்கின்றது!
உன் நினைவுகளை!

*
நீ என்னோடு இல்லாத
ஒவ்வொரு மணித்துளியையும்
சேமித்து வைத்திருக்கின்றேன்
அந்த நிமிடங்கள்
யுகங்களானாலும்
காத்திருப்பேன்நான்

நீ அனுப்புவதாக
சொல்லிச்சென்ற
ஈரமுத்தம் பதித்த
கடிதத்திற்காக…

*
புள்ளிகளை
நிலத்திலிட்டு
கோலத்தை
என் மனதினில்
வரைகின்றாய்

தினமும்
உன் வீட்டுவாசலில்
நீர் தெளித்து
*
ஆற்றுப்படுக்கையில்
என் தனிமையை,
நம் சந்திப்புகளின்
சாட்சியங்களோடு
சமாதானத்தில்
ஈடுபடும்போதெல்லாம்

என் அழுகையை
அதிகப்படுத்திவிடுகின்றது
நம்மை தினம் காண வரும்
தூரத்து நிலா!

*
என் வசந்தகாலத்தின்
கடைசி,காதல் சின்னமான
அந்த பூத்துக்குலுங்கிய
பூமரத்தின்
அடியிலிருந்துதான்
எழுதுகின்றேன் இதை

நம் பிரிதலில்
தன்னை பிளந்து
கிளைகளை ஒடிந்துக்கொண்டது
மரம்

உன்னை போலவே
இரக்கமற்றவளே..

Labels: