VIZI MOZI

உன் விழியெல்லாம் நவரசம் || கவிதைகள் || தொட்டராயசுவாமி.அ

Friday, January 11, 2008

காதலிகள்.com(1)

//அனைத்துக் கவிதைகளையும் படிக்க விழிமொழி //

*
இன்றும் என்னெதிரே
தேனீர் குடுவை
உனக்காக வாங்கிவைத்திருக்கின்றேன்

நீ பருக அருகிலில்லை
என்றாலும்

உனக்கானவைகளை
நான் என் செய்ய?
*
நான் உன்னிடம்
இதுவரை சொல்லாத
தவிப்பை விட

நீ யாரிடமும்
சொல்லிவிடக்கூடாது
என்ற பயமே
என்னை கவலையடையச்செய்கின்றது

"நான் உன்னை காதலிக்கின்றேன்".

*
நீரின் மேல்
இலைவிழுந்து போல்

இன்னும்
அடங்கவில்லை என்னுள்
உன் ஞாபக அதிர்வுகள்..

*
புத்தகக் கண்காட்சியில்
உன்னை என் கண்கள் படிப்பதை
நீ பார்த்துவிட்டதில்

என் கண்களை
கையில் கிடைத்த புத்தகத்தில்
பதித்தேன்..

தலைப்பு காதல்.
*

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home