காதலிகள்.com(1)
//அனைத்துக் கவிதைகளையும் படிக்க விழிமொழி //
*
இன்றும் என்னெதிரே
தேனீர் குடுவை
உனக்காக வாங்கிவைத்திருக்கின்றேன்
நீ பருக அருகிலில்லை
என்றாலும்
உனக்கானவைகளை
நான் என் செய்ய?
*
நான் உன்னிடம்
இதுவரை சொல்லாத
தவிப்பை விட
நீ யாரிடமும்
சொல்லிவிடக்கூடாது
என்ற பயமே
என்னை கவலையடையச்செய்கின்றது
"நான் உன்னை காதலிக்கின்றேன்".
*
நீரின் மேல்
இலைவிழுந்து போல்
இன்னும்
அடங்கவில்லை என்னுள்
உன் ஞாபக அதிர்வுகள்..
*
புத்தகக் கண்காட்சியில்
உன்னை என் கண்கள் படிப்பதை
நீ பார்த்துவிட்டதில்
என் கண்களை
கையில் கிடைத்த புத்தகத்தில்
பதித்தேன்..
தலைப்பு காதல்.
*
*
இன்றும் என்னெதிரே
தேனீர் குடுவை
உனக்காக வாங்கிவைத்திருக்கின்றேன்
நீ பருக அருகிலில்லை
என்றாலும்
உனக்கானவைகளை
நான் என் செய்ய?
*
நான் உன்னிடம்
இதுவரை சொல்லாத
தவிப்பை விட
நீ யாரிடமும்
சொல்லிவிடக்கூடாது
என்ற பயமே
என்னை கவலையடையச்செய்கின்றது
"நான் உன்னை காதலிக்கின்றேன்".
*
நீரின் மேல்
இலைவிழுந்து போல்
இன்னும்
அடங்கவில்லை என்னுள்
உன் ஞாபக அதிர்வுகள்..
*
புத்தகக் கண்காட்சியில்
உன்னை என் கண்கள் படிப்பதை
நீ பார்த்துவிட்டதில்
என் கண்களை
கையில் கிடைத்த புத்தகத்தில்
பதித்தேன்..
தலைப்பு காதல்.
*
Labels: காதல்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home